| கோடுதுணர்ந்து அன்ன குருகொழுக்கு எண்ணி |
5 | எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல |
| வளிசீத்து வரித்த புன்னை முன்றில் |
| கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய |
| எழுவெனின் அவளும் ஒல்லாள் யாமும் |
| ஒழியென வல்ல மாயினம் யாமத்து |
10 | உடைதிரை ஒலியின் துஞ்சு மலிகடல் |
| சில்குடிப் பாக்கங் கல்லென |
| அல்குவது அகநீ அமர்ந்த தேரே, |
(சொ - ள்.) மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கெழீ இய - நீலமணி களங்கமறத் தெளிந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; பூ மலி பெருந் துறை நிலவுக் குவித்து அன்ன மோட்டு மணல் இடி கரை - புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி எல்லை கழிப்பினம் ஆயின் - சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்ல வளி சீத்து வரித்த புன்னை முன்றில் - மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய எழு எனின் - கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அவளும் ஒல்லாள் - அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் ஒழி என அல்லம் ஆயினம் - யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; ஆதலால், யாமத்து உடை திரை ஒலியில் துஞ்சும் மலி கடல் சில்குடிப் பாக்கம் - சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; கல் என நீ அமர்ந்த தேர் அல்குவது ஆக - யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக! எ - று.
(வி - ம்.) துணிவு - தெளிவு. வரித்தல் - கோலஞ்செய்தல்.நீ போயபின் இங்கு நின்னொடு முயங்கிய இடனையும், ஆடியதுறையையும் நோக்கி மெலிந்திரங்காநிற்குமாதலி னெழுகவெனின்