பக்கம் எண் :


282


விழுது; வழி நாள் கோடை தூக்குதொறும் - வைகறையில் மேல் காற்று வீசுந்தோறும்; ஊசலின் துஞ்சு பிடி வருடும் - ஊசலாடுதல் போன்று கீழே துயிலுகின்ற பிடியானைமீது புரளா நிற்கும்; அத்தம் வல்லை ஆகுதல் நினக்கு ஒல்லுமோ - பாலையின் கண்ணே செல்லுதல் நினக்குப் பொருந்துவ தொன்றாகுமோ? ஆகாதன்றே! ஆதலின் நீ வரற்பாலை அல்லைகாண்; எ - று.

    (வி - ம்.) இற்றி - இத்திமரம். இச்சிமரமென இக்காலத்து வழங்கப்படுவது. முனாது - முன்பு: யான் புறப்படுமுன்பு வருவலென்றி யென்க.

    புறவின் சேவலும் பெடையுங் கூடக்காண்டலின் வேட்கை தாங்காது தானுங் கூடக்கருதித் தனியிருத்தலாற்றேனென்றாள்; அதனைத் தலைமகன் கொண்டு கூறினானாயிற்று. நீரும் நிழலுமின்றி முள்ளும் பரலும் நிரம்பிய பாலையாதலை நீ புறம்போந்து அறிந்திலையென்பான் தாய் ருங்ககலாத நனிமிக இளமையையென்றான்.

    இறைச்சி :- கோடை தூக்குதொறும் இத்தி வீழ் பிடியை வருடா நிற்குமென்றது, யான் சென்று மீண்டு வருமளவும் நினக்கு இடையே ஆற்றாமை யுண்டாகியவழி தோழி நின்னை ஆற்றுவியாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியை ஆற்றுவித்தகலுதல்.

(162)
  
163. . . . . . . . . . . . . . . .
திணை : நெய்தல்.

துறை : இது, வரைவுமலிந்து சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் வரைந்துகொள்ளும் வண்ணம் வருகின்றதனை யறிந்த தோழி, கழிபேருவகையளாய்த் தலைவியை நெருங்கி 'நம் துறைவனுடைய குதிரைகள் நாள்தோறும் வந்துவந்தலைதலால் அவற்றை நோக்கி என்னெஞ்சம் வருந்தாநிற்கும்: அது கழிந்தது; இனி மணம்புரிதல் காரணமாக அவற்றுக்குத் துன்பமின்மையால் அவை இளைப்பொழிவனவாக'வென்று மாவின் மேல்வைத்து மகிழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப்பட" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
உயிர்த்தன வாகுக அளிய நாளும் 
    
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு 
    
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் 
    
கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப 
5
நிலவுத்தவழ் மணற்கோடு ஏறி்ச்செல்வர 
    
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி 
    
வருந்துமன் அளிய தாமே பெருங்கடல் 
    
நீல்நிறப் புன்னைத் தமியொள் கைதை