பக்கம் எண் :


281


    (து - ம்.) என்பது, தலைவனுடன் பின்வருவேனென்ற தலைவியை நோக்கி 'நீ மாலைப்பொழுது தனியிருப்பதற்காற்றேனாதலின் நும்மொடு வருவேன் என்கின்றனை, கொடிய பாலை நெறியின்கண்ணே செல்லுகின்ற வன்மை உடையையாதல் நினக்குப் பொருந்துவதொன்றாமோ, ஆகாதன்றே? ஆதலின் நீ வரற்பாலையல்லை கா'ணெனத் தெளியக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "உடன் சேறற் செய்கையோடு அன்ன பிறவும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
மனையுறை புறவின் செங்கால் பேடைக் 
    
காமர் துணையொடு சேவல் சேரப் 
    
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் 
    
தனியே யிருத்தல் ஆற்றேன் என்றுநின் 
5
பனிவார் உண்கண் பைதல கலுழ 
    
நும்மொடு வருவல் என்றி எம்மொடு 
    
பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர் 
    
யாயொடு நனிமிக மடவை முனாஅது 
    
1 வேலின் இற்றித் தோயா நெடுவீழ் 
10
2 வழிநாள் ஊசலின் கோடை தூக்குதொறும் 
    
துஞ்சுபிடி வருடும் அத்தம் 
    
வல்லை யாகுதல் ஒல்லுமோ நினக்கே. 

    (சொ - ள்.) பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் - பெரிய சீர்த்தியையுடைய தந்தையினது நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையின்கண்ணே; யாயொடு நனிமிக மடவை - ஈன்ற தாயொடு பிரியாது வைகும் மிக்க இளமையுடையாய்!; முனாது மனை உறை புறவின் செங்கால் பேடை காமர் துணையொடு சேவல் சேர - முன்பு மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேடையாகிய அழகிய தன் துணையொடு அதன் ஆண்புறாவாகிய சேவல் கூடி மகிழாநிற்ப; புலம்பின்று எழுதருபுன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன் என்று - அவற்றை நோக்கி வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பஞ் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே இருப்பதற்கு ஆற்றேனாவேன் என்று; நின் பனி வார் உண்கண் பைதல கலுழ எம்மொடு - நின் நீர் வடிகின்ற மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலுழா நிற்ப எம்மை நோக்கி; நும்மொடு வருவல் என்றி - யான் நும்முடனே நீயிர் செல்லுமிடத்து வருகிற்பேன் என்று கூறாநின்றனை; வேலின் இற்றித் தோயா நெடுவீழ் - வேற்படை போலும் இலையையுடைய இத்தி மரத்தினுடைய நிலத்திலே படாது தொங்குகின்ற நெடிய

 (பாடம்) 1. 
வேனில் இற்றி.
 2. 
வழி நாரூசல்.