பக்கம் எண் :


293


அறிவித்தாளாயிற்று. இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.

    உள்ளுறை :-வேங்கை தலைவியாகவும், சுரும்புணவிரிந்தது ஏதிலாட்டியர் பழிச்சொற் கூறுமாறு பொருந்தியதாகவும், அதனிடத்துள்ள இறாலின்தேன் தலைவியினின்பமாகவும், புள்மொய்த்தல் தமர் சூழ்ந்திருப்பதாகவும், கசிந்து வந்த தேனைக் குறக்குறுமாக்களுண்பது மிக்க நலனைப் பசலையுண்டொழிப்பதாகவும், எஞ்சியதைப் பறழுண்ணுதல் எஞ்சிய நலனை ஒரோவொருகால் தலைவன் துய்ப்பதாகவும் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி மறுத்து வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) சுரும்பு - வண்டு. இறாஅல் - தேனடை. புள் - வண்டு. கல்லளைக் கசிந்த தீந்தேன் என மாறுக. நின்நாடு நன்மலை நாடாகவும் நீ நல்லையல்லை என்பாள் நன்மலைநாட என்றாள். குறக்குறுமாக்கள் அத்தேனடையை எடுத்துண்ண அறியாது தானே கல்லளையிற் கசிந்த தேனை உண்ணுதல் போன்று நீதானும் தலைவியை வரைந்துகொண்டு நுகராயாய்க் களவின்கண் நுகராநின்றனை, இனி, குறமாக்கள் உண்டெஞ்சிய மிச்சிலை மந்திப்பறழ் நக்கினாற் போன்று நீ நுகர்ந்து எஞ்சிய அவளழகினைப் பசலை யுண்ணா நின்றது என்றாளும் ஆயிற்றென்க. ஆரங்கமழும் மார்பினை என்றது நின்வரவு ஏதிலரானும் அறியப்படுகின்றது என்றற்குக் குறிப்பேதுவாயிற்றென்க.

(168)
  
169. . . . . . . . . . . . .
திணை : முல்லை.

துறை : இது, வினைமுற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

    (து - ம்.) என்பது. சென்று வினைமுடித்து மீளுந்தலைவன் நெஞ்சை நெருங்கி 'யாம் பிரிந்ததனாலுண்டாகிய தலைவியினது துன்பந் தீரும் வண்ணம் இப்பொழுது நாம் வருவதனை நம்முடைய மாளிகையின் சுவரின்கண்ணுள்ள பல்லி, பலபடியாக இயம்பி அறிவுறுத்தா நிற்குமோ'வெனக் கருதிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும், அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல் 
    
வருவம் என்னும் பருவரல் தீரப் 
    
படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி 
    
பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி 
5
மீமிசைக் கலித்த வீநறு முல்லை 
    
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும் 
    
வன்கை இடையன் எல்லிப் பரீஇ