பக்கம் எண் :


299


முளைத்து முளைதோன்றுதலானே; நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு வளர்க்கு நாளில்; அன்னை நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று கூறினள் - எம் அன்னை எம்மை நோக்கி "நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர்" என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; நும்மொடு நகை நாணுதும் - ஆதலின் எந் தங்கையாகிய இப் புன்னையின் எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்ம நீ நல்கின் நிறைபடு நீழல் பிறவும் உள - அம்மவோ? நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும், எ - று.

    (வி - ம்.)விளர் - இளமை; மென்மையின்மேலது. வான் - வெண்மை. ஆர் : அசை. காழ் - விதை; ஈண்டுப் புன்னைக்கொட்டை. அகைத்தல் - தோன்றுதல். நுவ்வை - நும் தங்கை.

    உடன்பிறந்தோர் சுற்றத்தார் முதலானோர் அயலிலே யிருக்கும்பொழுது தன் காதலனொடு அளவளாவுதல் தகுதியுடையதன்றாதலின், 'வெள்கி அஞ்சுதும்' என்றாள். நும்மொடு நகையாடுதற்கு நாணுதுமென்றதனாலே பகற்குறிக்கு உடன்படாமையும், பிறர்காணுதற்கு நாணுதுமென்று போதரலால் களவுக்கு அஞ்சினமென்றமையுங் குறிப்பாற் கூறி மறுத்து வரைவுகடாயது. மெய்ப்பாடு - மருட்கை. பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) இனி, முதற்கூறிய துறைக்கு நீ நல்குவாயேனும் இப் புன்னைநீழல் போன்று நிறைபடு நீழல் பிறவுமுளவோ என்று ஏகாரத்தை வினாவாக்கி இல்லையாகலின் பகலின்கண் வாராதே கொள் எனப் பொருள் காண்க. இதன்கண் தோழியின் படைத்துமொழி ஆற்றவும் இன்பந்தருலுணர்க.

(172)
  
173. . . . . . . . . . . . . . .
திணை : குறிஞ்சி.

துறை : (1) இது, தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, அன்னை வெறியெடுக்கின்றாளென்று தலைமகனுக்கு அறிவுறுத்தி அவனை வரைந்தெய்துமாறு உடன்படுத்த வேண்டிச் சிறைப்புறமாக வந்த அவன் கேட்குமாற்றானே தோழி தலைவியை நோக்கி "வெறி அயருங்களத்து வருகின்ற முருகவேள் "என்னாலெய்தியதன்று, ஒரு தோன்றலாலெய்தியது இந்நோய்' என்று அன்னைபால்