பக்கம் எண் :


303


வைத்தால் என்மாட்டு அவனுக்கு எவ்வண்ணம் அன்பு தோன்றும்?; அன்பு இலங்கடை புல்லு எவன்? - அன்பென்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக் கொள்வதனாலும் யாது பயன்படும்?; எ - று.

    (வி - ம்.)கோள் - காய். கொண்டி - கொள்ளைகொள்ளும் பரத்தை.

    இறைச்சி :- (1) ஈந்தின் முற்றுக்குலைபோன்றது தாளிப்பனங்குலையென்றது பரத்தையும் என்போலத் தலைமகனுக் குரியளாயினாளென்றதாம்.

    இறைச்சி :- (2) தாளிப்பனைமடலி லிருந்து ஆண்பறவை பெண்பறவையை விளித்தால் புலி எதிரொலியெடுப்ப முழங்காநிற்குமென்றது - இல்லகத்திருக்கும் யான் கணவனை விரும்பி ஏற்பின் அயலே பரத்தை முழக்கத்தோடு தலைவனை அழையாநிற்கு மென்றதாம்.

     மெய்ப்பாடு - அழுகை. பயன் - தலைவி புலவிகூர்தல்.

    (பெரு - ரை.) கற்றை ஈந்தின் என்பது தொடங்கி . . . . .. உயங்கினை என்னுந் துணையும் தோழி கூற்றைத் தலைவிகொண்டு கூறினபடியாம். அவனுடைய வீழாக்கொள்கைகள் அணைத்து வீழ்ந்தன; இப்பொழுது அவன் மல்லல் மார்பு கொண்டு மடுத்தனன் எனப் பொருள் கோடலுமாம்.

(174)
  
175. . . . . . . . . . . . . . .
திணை : நெய்தல்.

துறை : இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் கேட்டு இனி இல்வயிற் செறிக்கப்படுமாதலால், களவுப்புணர்ச்சிக் கியலாதென்று வரைந்தெய்துமாறு தோழி தலைவியை நோக்கி 'நம் தலைவனுடன் கூட்டம் நிகழ்ந்ததனை அன்னை அறியாதிருந்தும் ஏதிலாட்டியர் கூறுதலால் என்னைச் சுடுவதுபோல நோக்குவளெனவும் இதுபற்றி உள்ளுறையால் இறைமகன் இன்னது செய்தல் வேண்டுமெனவுஞ் சூழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
நெடுங்கடல் அளித்த கொடுந்திமில் பரதவர் 
    
கொழுமீன் கொள்கை அழிமணல் குவைஇ 
    
மீன்நெய் அட்டிக் கிளிஞ்சல் பொத்திய 
    
சிறுதீ விளக்கின் துஞ்சும் நறுமலர்ப் 
5
புன்னை ஓங்கிய துறைவனோடு அன்னை 
    
தானறிந் தன்றோ இலளே பானாள்