பக்கம் எண் :


308


எழில் உன்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாள் - ஆதலின் யான் வருந்தி வருந்தி ஒவியர் எழுதுதற்குத் தகுந்த அழகமைந்த மையுண்ட கண்ணிலே பாவைதோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ் வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி யுழலும் நாள்; இனியே வந்தன்று போலும் - இன்னே வந்து இறுத்ததுபோலும்; இனி எவ்வாறு ஆற்றுகிற்பேன்; எ - று.

    (வி - ம்.)தலையல் - நீங்குதல். அம் : சாரியை. இறந்தனர் : தெளிவின்கண் வந்த கால வழுவமைதி. பலகை - கிடுகு; இக்காலத்துக் கேடயமென மருவியது. பண்டினும் நனிபல அளிப்ப என்றது, மனைவியை முன்பு அன்புபாராட்டும் அளவினுங்காட்டில் மிகுதிப்படப் பாராட்டுதல்; கண்ணுந் தோளும் நுதலுங் கூந்தலுந் தைவந்து தழுவி முழுவி உறுப்புகளைப் பலகாலும் நோக்கிநிற்றலும் பலபடிசென்று போந்து நோக்கி மீளுதலும் பயனில்லாத வழியும் வாளா உரையாடலும் பிறவுமாம். இது துன்பத்துப்புலம்பல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) எழுது எழில் உண்கண் பாவை - கோலம் எழுது தலையுடைய அழகிய மையுண்ட கண் எனினுமாம்.

(177)
  
178. ...............................
திணை : நெய்தல்.

துறை : இது, சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇயது.

    (து - ம்.) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைவன்கேட்டு வரைவொடு புகுமாற்றானே தோழி தலைவியை இல்வயிற்செறித்தமையை அறிவுறுத்துவாளாய்த் "தலைவனது தேரையும் பார்க்கமுடியாதாயிற்று, நாண்மிகுதலாலே துயிலவும் இல்லை. என்நெஞ்சும் அழிந்த"தென்று கூறி உள்ளுறையாலே தலைவியினுடைய ஏனைய நிலைமையுங் கூறி வரைவுகடாவாநிற்பது.

    (இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும் ......................... அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.

    
ஆடமை ஆக்கம் ஐதுபிசைந்து அன்ன 
    
தோடமை தூவித் தடந்தாள் நாரை 
    
நலனுணப் பட்ட நல்கூர் பேடை 
    
கழிபெயர் மருங்கின் சிறுமீன் உண்ணாது 
5
கைதையம் படுசினைப் புலம்பொடு வதியும் 
    
தண்ணந் துறைவன் தேரே கண்ணின் 
    
காணவும் இயைந்தன்று மன்னே நாணி 
    
நள்ளென் யாமத்துங் கண்படை பெறேஎன் 
    
புள்ளொலி மணிச்செத்து ஓர்ப்ப 
10
விளிந்தன்று மாதவத் தெளிந்தஎன் நெஞ்சே.