பக்கம் எண் :


311


ஆக - இன்று கறுத்த அணலையுடைய காளையாவானது பொய்ம் மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு; முருந்து ஏர் தன் வெண்பல் முகிழ் நகை திறந்து அருஞ் சுரம் இறந்தனள் (என்ப) - முருந்துபோன்ற தன் வெளிய எயிறுகளிலே தோன்று நகையைத் தோற்றுவித்து உடன்பட்டுச் செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றொழிந்தனள் (என்று கூறுவர்); இத்தகைய இளமையுடையாள் எங்ஙனம் சென்று மனையறம் பூண்டு ஒழுகா நிற்குமென்று அஞ்சுகின்றேன்? எவ்வண்ணம் ஆற்றுவேன்; எ - று.

    (வி - ம்.)அ - அழகு. அணல் - மோவாயின் கீழுள்ள தாடி. பொய் - "நான் செல்வமிக்குள்ளேன், வன்மையுடையேன், என் மனையகத்து நின்னைப் பாராட்டுநர் பல்லாயிரர்காண்" என்பது முதலாயின. புகல் - பற்றுக்கோடு. இத்தகைய என்பது முதற் குறிப்பெச்சம்.

    வயலைக்கொடியை ஈற்று ஆ மேய்ந்தழித்தனை நோக்கி என் குறுமகள் வயிறலைத்து வருந்தியதுபோல அவளை ஏதிலாளன் துய்த்துக் கைக்கொண்டுபோக யான் வயிறலைத்துப் புலம்பாநின்றேனென்பது. மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

    (பெரு - ரை.) இதன்கண் தீம்பால் உண்ணாள் விம்மி நெருநலும் அனையள் என்றது அவளது இளமை சுட்டிப் புலம்பியதாம். அருஞ்சுரம் இறந்தனள் என்பது அவ்விள மகள் எங்ஙனம் அக் கொடிய சுரத்தைக் கடப்பளோ என்று அஞ்சியது. இல்லெழு வயலை ஈற்று ஆ தின்றென வயிறு அலைத்த குறுமகள் என்றது அவள் இயல்பாகவே பொருள்களைப் போற்றும் திறமுடையளாயிருந்தமை குறித்துப்பாராட்டியது என்க.

(179)
  
180. ......................................
திணை : மருதம்.

துறை : இது, தலைமகற்கு வாயினேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை எதிரேற்று முகமன் வழங்கிய தோழி, தலைமகளிடஞ் சென்று கூறுதலும் அவள் சினமிகுந்து உடன்படாமையால் உள்ளங்கலங்கி "ஊரன் பரத்தையர் பால் நசையுடையனாகி இல்வயின் வருகின்றிலன்; வரினுந் தலைவி தான் புலவிநீங்குவாளல்லள்; இவ்விருவருடைய பகையும் யான் இறந்தொழியின் அன்றே தீர்ந்துவிடும் போலு"மென நொந்து கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""அடங்கா வொழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை 
    
கழனி நாரை உரைத்தலிற் செந்நெல் 
    
விரவுவெள் ளரிசியின் தாஅம் ஊரன்