(து - ம்.) என்பது, தலைவன் வினைமுடித்துவரக்கண்ட தோழி மகிழ்ந்து "மாலைப் பொழுதிலே தலைவனது தேர்வந்ததாதலின,் இனிப் பசலையால் இவளது நெற்றியினழகு கெடாதிருக்கு" மெனவும,் உள்ளுறையால் முன்பு பரத்தையிற் பிரிந்த தலைவனை வெறுத்தாற்போல வெறாது எதிர்கொள்ளற்பாலள் எனவும் உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""பெறற்கரும் பெரும்பொருள்"" (தொல். கற். 9) என்னும் நுாற்பாவின்கண் வரும் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக்கொள்க.
| உள்ளிறைப் குரீஇக் காரணல் சேவல் |
| பிறபுலத் துணையோடு உறைபுலத் தல்கி |
| வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை |
| நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
5 | சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் |
| துவலையின் நனைந்த புறத்த தயலது |
| கூர லிருக்கை அருளி நெடிதுநினைந்து |
| ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக் |
| கையற வந்த மையல் மாலை |
10 | இரீஇய வாகலின் இன்னொலி யிழந்த |
| தாரணி புரவி தண்பயிர் துமிப்ப |
| வந்தன்று பெருவிறல் தேரே |
| உய்ந்தன் றாகுமிவள் ஆய்நுதற் கவினே. |
(சொ - ள்.) உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல் - மனையகத்துக் கூரையினுள்ளே உறைகின்ற கரிய தாழ்வாயையுடைய குருவியின் சேவல்; பிற புலத் துணையோடு உறைபுலத்து அல்கிவந்ததன் - வேற்றுப்புலத்துச்சென்று ஆண்டுள்ள