பக்கம் எண் :


316


போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; நல் மார்பு அடைய முயங்கி மெல்மெல கண்டனம் வருகம் - அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக ! எ - று.

    (வி - ம்.)வறிது - சிறிது: வறுந்தலை - சிறிய தலை; அலங்கரிக்கப்படாத தலையுமாம்.

    நிலாவெழுகின்றதனாலே களவின் முயங்க இடையீடுபடுதலை அறிவுறுத்தி வரைவுடன்படுத்துவாள் நிலவுமறைந்தன்றென்றாள். நெறியினது ஏதங் கூறுவாள் களவுக்கு இன்றியமையாமை போல இருளும் பட்டதென்றாள். அன்னை துயிலுமென்பதனால் அவளது வெகுளியும் இல்வயிற் செறிப்பும் அறிவுறுத்தினாள். கண்டனம் வருகமென்றதனாலே இல்வயிற் காப்புப் பூண்டதே காரணமாக இதுகாறுங் காணப்பெறாமை யறிவுறுத்தினாள் அவன் மார்பு முயங்கப்பெறாது போயதேயென்பதறிவுறுத்துவாள் கையிழந்த நன்கலத்தை உவமித்தாள். அவன் மார்புபெறின் உண்டாகு மகிழ்ச்சியையும் அனைய கலன் கைவந்தாற் போன்ற தென்பதனாற் கூறினாள். வரைந்துகொள்ளென வற்புறுத்துவாரின்மையாலே தன்னுள்ளஞ் சென்றவாறு களவின்வந்து ஒழுகுமென்பாள் காப்போர் நீத்த களிறுபோன்றானென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) "நிற்புறங் காக்கும்" என்றும் பாடம். வந்தோன் பனியலை நிலை கண்டனம் முயங்கி வருகம் சென்மோ என்று இயைத்து வருவேம் - செல்வாயாக! என்று முடித்தல் நேரிதாம்.

(182)
  
    திணை :நெய்தல்.

    துறை : இது, வரைவிடைவைத்துப் பிரியுந்தலைவற்குத் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரைதல் காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலுறுந் தலைமகனைத் தோழி பிரிதலால் வருகின்ற துன்பம் இன்ன தன்மைய தென்பாள் "உமணர் பிரிதலாலே இன்மையுண்டா தல்போல், நீ பிரிதலால் இன்னாமை தோன்றும்: அவ்வின்னாமை தோன்றுமாறு ஊதையொடு மாலையுந் தோன்றுதலுடையதாயிராநின்றது; இவ்வளவிலே பிரியின் அவள் வாழாள்; அதனை நினையாதோய், நீ அறியாமையுடையை"யென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, ""ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கின் என்பதனால் அமைத்துக் கொள்க.

    
தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து 
    
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி