பக்கம் எண் :


320


நீ முயலாதொழியின் அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்த"தென அதனை நோவனென்று அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்"" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.

     துறை : (2) சேட்படுக்குந் தோழிக்குத் தலைவன் சொல்லிய துாஉமாம்.

    (து - ம்.) என்பது சேட்படை முன்பு கூறினமையானே பொருள் வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்).

    (இ - ம்.) இதனை ""தண்டாது இரப்பினும்"" (தொல். கள. 11)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.

    
ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக் 
    
காமங் கைம்மிகக் கையறு துயரங் 
    
காணவு நல்கா யாயிற் பாணர் 
    
பரிசில் பெற்ற விரியுளை நன்மான் 
5
கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி 
    
இரவலர் மெலியாது ஏறும் பொறையன் 
    
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின் 
    
அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து 
    
பறவை இழைத்த பல்கண் இறாஅல் 
10
தேனுடை நெடுவரைத் தெய்வம் எழுதிய 
    
வினைமாண் பாவை அன்னோள் 
    
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே. 

    (சொ - ள்.) பாணர் பரிசில் பெற்ற விரி உளை நல் மான் - பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறுநெறி - கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாது இரவலர் ஏறும் பொறையன் - மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின் - புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப்பாய்ந்து பறவை இழைத்த பல் கண் இறாஅல் - அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; தேன் உடை நெடுவரை - மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; கொலை சூழ்ந்தனள் -