(து - ம்.) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுகின்றானைத் தோழி நோக்கி "வெற்பனே! எங்கள் தலைவி" முதற்கூட்டத்துக் கண்ணே களவொழுக்கம் தீதென நன்றாக அறிந்துவைத்துளளெனின்; நீ வரைதலுஞ்செய்யாது இப்பொழுது அருகியும் வருதல் காரணமாக வாடுநளல்லள்; அது கழிந்தது, இனி மொழிந்து யாது பய"னென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்.............................................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்""
(தொல். கள. 23)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| படுநீர்ச் சிலம்பின் கலித்த வாழைக் |
| கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை |
| ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம் |
| மெல்விரல் மோசை போலக் காந்தள் |
5 | வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப |
| நன்றி விளைவுந் தீதொடு வருமென |
| அன்றுநன் கறிந்தனள் ஆயிற் குன்றத்துத் |
| தேமுதிர் சிலம்பில் தடைஇய |
| வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே. |