பக்கம் எண் :


324


    (இ - ம்.) இதற்கு, ""பிரிந்தவழிக் கலங்கினும்"" (தொல். கள. 20)என்னும் விதிக்கொள்க.

    
நெய்தல் கூம்ப நிழல்குணக்கு ஒழுகக் 
    
கல்சேர் மண்டிலஞ் சிவந்துநிலந் தணியப் 
    
பல்பூங் கானலும் அல்கின் றன்றே 
    
இனமணி யொலிப்பப் பொழுதுபடப் பூட்டி 
5
மெய்ம்மலி காமத்து யாந்தொழுது ஒழியத் 
    
தேருஞ் செல்புறம் மறையும் ஊரொடு 
    
யாங்கா வதுகொல் தானே தேம்பட 
    
ஊதுவண்டு இமிருங் கோதை மார்பின் 
    
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு 
10
இன்னகை 1 மேவநாம் ஆடிய பொழிலே. 

     (சொ - ள்.)நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய - நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பல் பூங்கானலும் அல்கின்று - பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய - இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுதுபட மணி இனம் ஒலிப்பப் பூட்டி தேர் செல் புறம் மறையும் - பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஊரொடு - ஆதலால் இவ்வூருடனே; தேம்பட ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் மின் இவர் கொடும்பூண் கொண்கனொடு - தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாம் இன் நகை மேவ ஆடிய பொழில் யாங்கு ஆவது - நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்; எ - று.

     (வி - ம்.)அல்குதல் - குறைதல்; வெயில் மறைதலாலே சோலையினது தோற்றம் கட்புலனாகாதபடி சிறிது சிறிதாக மறைந்து

 (பாடம்) 1. 
மேவி,