(து - ம்.) என்பது, பகற்குறிவைத்துத் தலைவியைக் கூடிச் செல்லுந் தலைவனைத் தோழி நோக்கி 'இங்ஙனஞ் செல்லுவையாயின் மீண்டு நீ வருவதற்குள் இவள் இறந்துபடுமாதலால், அதற்கேற்றது செய்"யென வரைவுதோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .... அனைநிலை வகையால் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதன்கண் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் |
| சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை |
| பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிர்பு |
| நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி |
5 | விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப ! |
| இனமணி நெடுந்தேர் பாக னியக்கச் |
| செலீஇய சேறி யாயின் இவளே |
| வருவை யாகிய சின்னாள் |
| வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே. |
(சொ - ள்.) இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல் சுறவுக் கோட்டு அன்ன முள் இலைத் தாழை - இறாமீனின்