(து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிந்த வழி பின்னே தேடிச் சென்ற செவிலி ஒரு தலைவனுந் தலைவியுமாக எதிரே வருவாரைத் தன்மகளும் மருமகனுமாமென மயங்கி அருகில் வருதலும் ஐயம் நீங்கிவிடலாய், இவள் என்மகள் போலுதலானே என் கண்ணீர் பெருகுவதுகாண்; அவள் இத்தன்மையளே; நும்மை விருந்தோம்புகிற்பேன்; அதற்குரிய அவள் தந்தையூர் இதுகண்டீர், யான் அவளை யீன்ற தாய்; அவளைப்பற்றி நீயிர் கூறுவீராயின், நுமக்கு அறமுண்டாகுமென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே" (தொல். அகத். 42) என்னும் நூற்பாவின்கண் அமைத்துக்கொள்க.
| சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து |
| ஓமை நீடிய கானிடை அத்தம் |
| முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள் |