| கண்பட நீராழ்ந் தன்றே தந்தை |
5 | தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல் |
| கோடேந்து அல்குல் அரும்பிய திதலை |
| வாஅர்ந் திலங்குவால் எயிற்றுப் பொலிந்ததார்ச் |
| சில்வளைப் பல்கூந் தலளே அவளே |
| மையணல் எருத்தின் முன்பின் தடக்கை |
10 | வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் |
| தந்தை தன்னூர் இதுவே |
| ஈன்றேன் யானே 1 பொலிகநும் பெயரே. |
(சொ - ள்.) சேயின் வரூஉம் மதவலி - சேய்மைக் கண்ணிருந்து வாராநின்ற அரசகுமாரனே!; யா உயர்ந்து ஓமை நீடிய கான் இடை அத்தம் - யாமரம் உயர்ந்து ஓமை மரம் நீடிய காடிடையிட்ட சுரத்திலே; முன் நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட நீர் ஆழ்ந்தன்று - நேற்று நெடுந்தூரஞ் சென்ற என் மகள் போல இவள் என்கண் எதிரே படுதலால் என்கண் நீர் நிரம்பப் பெருகாநின்றது; அவள் நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை வா அர்ந்து இலங்கு வால் எயிற்றுப் பொலிந்த தார்ச் சில்வளைப் பல் கூந்தலள் - அவள்தான் நுண்ணிய பலவாய வரி பொருந்திய அல்குலும் தோன்றிய சுணங்கும் நேர்மையுற்று விளங்கிய வெள்ளிய பற்களும் பொருந்திய பாதிரி மலர்ப் பிணையலும் சிலவாய வளையும் பலவாய கூந்தலும் உடையாள்; தந்தை தன் ஊர் இடவயின் தொழுவேன் - நிற்க, நும்மை அவள் தந்தையினூர் இடத்தில் விருந்தேற்று உபசரித்துத் தொழுகிற்பேன்; மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை வல் வில் அம்பின் எய்யா வன் மகிழ்த் தந்தை தன் ஊர் இதுவே - அவ்வண்ணம் நும்மை எதிர்கோடற்கு ஏற்ற மைபோன்ற கரிய அணலையும் பிடரியையும் வலிய நெடிய கையையும் வலிய வில்லினையும் அம்பையும் அளந்தறியா வண்மையையும் கள்ளுணவையுமுடைய தந்தையினது ஊர் இதுவே கண்டீர்; யான் ஈன்றேன் - யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்; நும் பெயர் பொலிக - எனது ஆற்றாமையைக் கண்ட நீயிர் அவளை எதிர்கண்டு பேசிய வகையை நுவலுவீராயின் நுமக்கு அறத்தாலாய புகழ் உண்டாகுக! எ - று.
(வி - ம்.) மதவலி - அரசன், மத: விசேடித்த உரிச்சொல்.
சிறிதும் ஐயமில்லையென்பாள் தேற்றத்தால் முன்னின்றாளை என் மகளே யென்றாள். அன்பின் மிகுதியாலே கண்ணீராழ்ந்தமை கூறினாள். தான் செவிலியென்பதனை அறிவுறுத்துவாள் தொழுவலென்றாள்.
(பாடம்) 1. | பொலிக நும்புகழே, |