பக்கம் எண் :


347


கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ - கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே - இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; இதுவும் ஆங்கண் நுவன்றிசின் - என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக! எ - று.

     (வி - ம்.) கண்ணிகட்டல் - அரும்புதோன்றுதல். கதிர, அ: சாரியை, சாறு - திருவிழா. அவ்வூரில் நடக்குந் திருவிழாவை ஊர்ப் பொதுநிலத்திருக்குங் குயவனே! ஆங்குள்ள வீடுதோறுஞ்சென்று கூறிப்போவது அவ்வூர் வழக்குப்போலும்.

     இசையால் யாரையும் மயக்கவல்லனாதலின் அதுகொண்டு மயங்காதீரென்பாள் அவ்விசை வன்மையை முதலிற்கூறினாள். அல்லல் ஒரு காலத்தோடொழிவதன்றென அறிவுறுத்துமாறு தலைவிக்குச் செய்த அல்லல் மிகப் பல்குவவெனக் கூறுதியென்றாள். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயில் மறுத்தல்.

     (பெரு - ரை.) ஈதும் ஆங்கண் என்றும் பாடம். அமலுதல் - நெருங்குதல். பொய்பொதி கொடுஞ்சொல் என்னும் தொடராக்கத்தின் இன்பமுணர்க. திருவிழாவைக் குயவர்கள் ஊரார்க்கு அறிவுறுத்துவதும்; அப்பொழுது அவர் நொச்சிமாலை சூடிச்செல்வர் என்பதும் அக்கால வழக்கம் ஆதலை இதனால் உணரலாம்.

(200)
  
201. பரணர்
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, கழறிய பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.

     (து - ம்.) என்பது, பாங்கற்கூட்டத்துக்கண் மறுத்துக்கூறிய பாங்கனைத் தலைமகன் நோக்கிக் குறவன்மகள் கடிய காவலினாலே பெறுதற்கரியளாதலின், நீ அவளைக் கருதுதல் கூடாதென்றோய், எவ்வழியானும் கொல்லியம்பாவை அழியாது வைகுமியல்புபோல என்னெஞ்சினின்று நீங்குவாளல்லளாதலின் யான் யாதுசெய்யவல்லேனென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும,்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    
மலையுறை குறவன் காதல் மடமகள் 
    
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் 
    
சொல்லெதிர் கொள்ளாள் இனையள் அனையோள்