பக்கம் எண் :


351


     இறைச்சி:- கன்றோடு பிடியைத் தழுவிய வேழம் கவளமூட்டுங் காடு என்றது, காதலியோடு இல்லறம் நிகழ்த்தி அவளிடத்துப் பிறந்த மக்களுடனே அவளையும் பாதுகாத்துக் கொள்வேனெனக் காதலன் குறிப்பித்தாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைமகளை அயாவகற்றல்.

     (பெரு - ரை.) வேங்கை என்பதனைப் பராரைக்குமுன்னும் கூட்டுக. தேன் செய் பெருங்கிளை என்றது தேனீக்களின் கூட்டத்தினை. பொன்புரை கவழம் என்றது பொன்போன்ற வேங்கைப் பூவாகிய உணவு என்றவாறு.

     கார்த்திகைத் திங்களிலே மலையின்மிசை விளக்கேற்ற அறஞ் செய்யும் வழக்கம் பண்டுமிருந்தமையை இதனால் உணர்க.

(202)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லி வரைவு கடாயது.

     (து - ம்.) என்பது, களவுப் புணர்ச்சியில் வரைவு நீட்டித்த தலைமகன் மறைவாகிய .ஓரிடத்தில் வந்திருப்பதையறிந்த தோழியானவள் அவன் கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கிக் "கானலிடத்தும் நம் கணவனோடு உற்ற நம்மில் ஒருவரையொருவர் பிரிந்தால் பிழைப்பது அரிதென்னாமல் அலரெழுந்து அவரை இங்கு வாராவண்ணம் தடுத்ததுமன்றி அதுகாரணமாக இவ்வூர் வருந்துதலையுஞ் செய்கின்றது ; இஃதென்ன கொடுமை"யென நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின் கண் அமைத்துக் கொள்க.

    
முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் 
    
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு 
    
அகமடற் பொதுளிய முகைமுதிர் வான்பூங் 
    
கோடுவார்ந் தன்ன வெண்பூத் தாழை 
5
எறிதிரை உதைத்தலிற் பொங்கித் தாதுசோர்பு 
    
சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலா மறுக்கும் 
    
மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை 
    
ஒருநாள் பிரியினும் உய்வரிது என்னாது 
    
கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச் 
10
செய்ததன் தப்பல் அன்றியும் 
    
உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே.