(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் யாரையும் அறியேனென்றலும் தலைவி அவனை நோக்கி 'நின் மார்பிலே துஞ்சி இப்பொழுது அவ்வின்பத்தைப் பொருளாய்த் தெருவிடைப் போந்த அப்பரத்தையை யாம் கண்டேம்; அங்ஙனமாக நீ ஏன் வீணாகப் பொய் புகலுகின்றனை'யென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) (1) இதற்குப்,
| "புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு |
| அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி |
| இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி |
| எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்" (தொல்-கற்- 6) |
என்னும் விதி கொள்க.
(இ - ம்.) (2) இனி, இரண்டாவது துறைக்கு, "உணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்" (தொல்-கற். 9) என்னும் விதி கொள்க. அஃதாவது, தோழி ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தளாய் நின்று தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம்போந் தன்மை உண்டாக்கிய தகுதிக்கண் தலைவனுக்கு வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆகும் என்பதாம்.
| ஐய குறுமகட் கண்டிகும் வைகி |
| மகிழ்நன் மார்பில் துஞ்சி யவிழிணர்த் |
| தேம்பாய் மராஅங் கமழுங் கூந்தல் |
| துளங்கிய லசைவரக் கலிங்கந் துயல்வரச் |
5 | செறிதொடி தெளிர்ப்ப வீசி மறுகிற் |
| பூப்போ லுண்கண் பெயர்ப்ப நோக்கிச் |
| சென்றனள் வாழிய மடந்தை நுண்பல் |
| சுணங்கணி வுற்ற விளங்கு பூணள் |
| மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப் |
10 | பழம்பிணி வைகிய தோளிணைக் |
| குழைந்த கோதைக் கொடிமுயங் கலளே. |
(சொ - ள்.) ஐய மடந்தை மகிழ்நன் தங்கி மார்பில் துஞ்சி ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; தேம் பாய் மராஅம் கமழுங் கூந்தல் துளங்கு இயல் அசைவர - வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து