பக்கம் எண் :


378


     (வி - ம்.) ஞான்று - தொங்கி, கீழிறங்கி. எல்லி - இரவு. சேவல் - ஈண்டு இரவிலியங்கும் ஆந்தையின் சேவல்; "எந்நில மருங்கின்" (தொல். பொ. 19) என்றபடி புள்மயங்கிற்று. குரால் - கோட்டான்; குராற்கூகை: இருபெயரொட்டு. பரிய அரை - பரிய என்ற குறிப்புப் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. கேட்குவன் கொல்லோ வென்றது துன்பத்துப் புலம்பல்.

     மாலைப் பொழுதானது காமநோயை முற்படவிட்டு வருதலின் அது வருதற்கேதுவாகிய ஞாயிறு படுந்தன்மை கூறி வருந்தினாள். தனித்துறை வாழ்க்கையின் இரவு பொலிவடையாமையின் எல்லியும் புலம்படைந்தது என்றாள். ஏனைப் புள்ளினம் புணர்ச்சிகருதிப் பெடையை யழைப்பக் கேட்டலானே தனது ஆற்றாமை கூறுகின்றவள் அதனுள் இறந்துபடாமல் அன்றிற்குரலுங் கேட்குவேன் கொலென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) "ஆயாக் காதலொடு" எனக் கண்ணழித்துக் கோடலுமாம். ஆயாக் காதல் - தேயாக் காதல். அதர்ப்படுதல் - அவன் கூறிய நெறியிலே படுதல். தெளித்தோர் என்றது - இயற்கைப் புணர்ச்சிக்கண் "மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப, நிற்றுறந்து அமைகுவெனாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவாகுக யான் செலவுறுதகவே" என அவன் கூறிய தெளிவகப்படுத்த மொழியை நினைந்தென்க.

(218)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவிடைவைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவினின்று மணம்புரிந்து கொள்ளக்கருதிய தலைமகன் அது காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலும் ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி "என் உயிர்போவதாயினும் சேர்ப்பன் தானேவந்து புணர்ந்து தலையளி செய்ததனாலே இன்னும் வந்து முயங்குவனென்னுங் கருத்தோடு அவன்மீது சிறிதுஞ் சினங் கொள்ளே" னெனத் தனக்குண்டாய வருத்தத்தை உள்ளடக்கிக்கொண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற்செய்யுள் விதியே அமையும்.

    
கண்ணுந் தோளுந் தண்நறுங் கதுப்பும் 
    
பழநலம் இழந்து பசலை பாய 
    
இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்னதூஉம் 
    
புலவேன் வாழி தோழி சிறுகால் 
5
அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடற் 
    
பெருமீன் கொள்ளுஞ் சிறுகுடிப் பரதவர் 
    
கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர்