பக்கம் எண் :


382


     (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிப் பாகனே! நம் காதலி தம் புதல்வன் துயிலுமிடம் புகுந்து "எந்தாய் வருக" என்னுஞ் சொல்லை யாம் கேட்டு மகிழுமாறு நின் தேர் விரைவிலே செல்லுவதாகவென்று மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
மணிகண் டன்ன மாநிறக் கருவிளை 
    
ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப் 
    
பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க் 
    
கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க 
5
வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் 
    
நீரணிப் பெருவழி நீளிடைப் போழச் 
    
செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர் 
    
விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் 
    
மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க 
10
நடைநாள் செய்த நவிலாச் சீறடிப 
    
பூங்கண் புதல்வன் தூங்குவயின் ஒல்கி 
    
வந்தீக எந்தை என்னும் 
    
அந்தீம் கிளவி கேட்க நாமே. 

     (சொ - ள்.) பாக விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் - பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க நாள் நடை செய்த நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் - மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குவயின் ஒல்கி - தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; எந்தை வந்தீக என்னும் அம் தீங் கிளவி நாம் கேட்க - "எந்தாய்! வருக" என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; மணி கண்டு அன்ன மா நிறக் கருவிளை ஒள் பூந்தோன்றி யொடு தண் புதல் அணிய - நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொன் தொடர்ந்து அன்ன தகைய நல்மலர்க் கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க - பொற்காசினைத் தொங்க