(து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலானே வருந்திய தலைமகளைத் தோழி, 'நீ வருந்தாதேகொள்; அவர் இப்பொழுதே வருவர்' என்று வலியுறுத்திக் கூறப் பின்னும் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! நாடனது மார்பை நாம் போய் இரந்தோமோ? இல்லையே: அவன் தானே வந்து தலையளிசெய்து, இப்பொழுது துன்புறுத்துகின்றானே யென்று எதிரழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற் செய்யுட்கோதிய விதியே யமையும்.