பக்கம் எண் :


387

திணை : பாலை.

துறை : இது, தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்துஞ் சொற்கடாவப்பட்டு அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாராகாரோ என்று சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் பிரிந்ததனைத் தோழி தலைவிக்குத் தெரியக் கூறி மீட்டும் வினாவக் கேட்டு வருந்தி அன்பின் மிக்க பெரியராய் நின்னை நீங்ககிலேம் என்று தேற்றிச் சுரத்தின்கண்ணே சென்ற நம் காதலர் திறத்து யான் இனி மொழிவது யாதென நொந்து கூறா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு ''அவனறிவு ஆற்ற அறியுமாகலின்'' (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண் ''ஆவியின் வரூஉம் பல்வேறு நிலையினும்'' என்னும் விதிகொள்க.

    
அன்பினர் மன்னும் பெரியர் அதன்றலைப்் 
    
பின்பனி அமையம் வருமென முன்பனிக்் 
    
கொழுந்து முந்துறீஇக் குரவுஅரும் பினவே் 
    
புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச் 
5
செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 
    
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின் 
    
பிரியல மென்று தெளித்தோர் தேஎத்து் 
    
இனியெவன் மொழிகோ யானே கயனறக் 
    
கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி் 
10
வினைமூசு கவலை விலங்கிய் 
    
வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே.் 

     (சொ - ள்.) அன்பினர் மன்னும் பெரியர் - நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்தலை அமையம் பின்பனி வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇ - அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குரவு அரும்பின-குராமரம் அரும்பு கட்டின; இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் - மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ஓ புணர்ந்தீர் புணர்மின்ன - 'ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!' என்று; குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று - தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற்