பக்கம் எண் :


390


அவனே வந்து என்பதுமுதற் குறிப்பெச்சம். வெண்கோடு - தாறு விடுதலுக்கும், ஓதி - பூவுக்கும் உவமையாக்குக. நாடனது மார்பையென இயைக்க.

    இங்ஙனம் வருத்துமாறு கைவிட்டமையின் நயந்த எமக்கு உதவாத நாரில்மார்பென்றாள். இரவாதுதானேவந்து புணர்ந்தகன்றமையின் தன்னுறு புன்க ணோம்புவதல்லது பிறருறுவிழுமங் களையாத தன்மையனாயினானே என்றிரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (2) உரை :-மலைநாடன்பாற்சென்று விரும்பினார்க்குதவாத அவனது மார்பை இங்கு இரந்தோருளரோ? யாருமிரந்தாரிலர்: அவன் பற்பலர் மாட்டுந்துய்க்கச்செல்லுதல்போல, என்மாட்டும் வந்தானாக அது கொண்டு தலைமகள் வருந்துவதால் யாதுபயன்? எ - று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - காதற்பரத்தை தலைமகளை இகழ்ந்துகூறல்.

(225)
  
     திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடைமெலிந்த தலைமகள் வன்பொறை எதிர் மொழிந்தது.

     (து - ம்.) என்பது, தலைவன் பொருள்கொணருமாறு பிரிதலானே வருந்திய தலைமகளைநெருங்கி நீ வருந்தாதேகொள் வலிதிற்பொறையோடிருவென்ற தோழிக்கு அவள் நம்காதலர் அன்புசெய்திருந்தமையால் நாம்உயிருய்ந்திருந்தேம்; அதனையறியாராய் அவர் அரும்பொருள் விரும்பி அகன்றுபோயினார்: ஆடவர்செய்கை இதுவேயென்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிவர்காணென வருந்தி எதிர்மொழி கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும், ''அவன் அறிவு ஆற்ற அறியும்'' (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண் ''ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை'' என்னும் விதியே கொள்க.

    
மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்  
    
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்  
    
பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்  
    
நாந்தம் உண்மையின் உளமே அதனால்  
5
தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து  
    
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்  
    
சென்றோர் மன்றநங் காதலர் என்னும்  
    
இன்ன நிலைமைத் தென்ப  
    
என்னோரும் அறிபஇவ் வுலகத் தானே.  

     (சொ - ள்.) நல்நுதல் இவ் உலகத்து மாந்தர் மரம் சா மருந்துங் கொள்ளார் - அழகிய நுதலையுடையாய்! இவ்வுலகத்து மாந்தர்