பக்கம் எண் :


395


     (பெரு - ரை.) இருள்நடுநாள் பண்பில் ஆரிடை வருகின்றான் ஆயினும் நந்திறத்து அருளான்கொல். அங்ஙனம் அருளாமைக்குக் காரணந்தான் யாதோ என்றாள் என்க. எனவே அவன் களவின்பமே காமுறுகின்றான் வரைந்துகொண்டு நந்திறத்து அருள்கிலன் என்றாளாயிற்று. இனி தலைவன் வரைந்துகொள்ளாமையான் தலைவி எய்தும் துயரத்தை உள்ளுறையாக வைத்துணர்த்தினள் என்க. வேழம் கணை அழுந்துபட இயம்பும் என மாறினுமாம். அருவி மழைபெய்யுங்கால் வீழ்தலும் எஞ்சியபொழுதில் மாறுதலும் போன்று இவனும் தான் விரும்பியபொழுதுவந்து அளிசெய்கின்றான். எஞ்சியபொழுதில் மறந்து மாறுகின்றான் என்பாள் எழுந்து வீழ் அருவிய மலைகிழவோன் என்றாள் என்றுங் கொள்க.

(228)
  
     திணை : பாலை.

     துறை : (1) இது, தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது.

     (து - ம்.) என்பது, தலைமகன் தான் வினைவயிற்பிரிதலைத் தோழிக்குரைப்ப அவள் சென்று தலைமகட்குணர்த்தி மீண்டுவந்து தலைமகனைத் தொழுது நீயிர் செல்லுகிறீரென்றும் செல்லாதுறைகுவீரென்றும் கூற அஞ்சுவேன், ஆதலால் சென்று வினைமுடித்து விரைந்து வருவீராக; வாடை வந்து நின்றதனைக் கண்டீரல்லீரோவென உடன்பட்டுக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனைப் ''பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்'' என்புழிப் பிற (தொல். கள. 23) என்ற தன்கண் அமைத்துக்கொள்க.

    துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற்செல்லுதலை உடன்படாது முற்கூறியபடியே தடுத்துக்கூறியதுமாகும். (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதனை, முன் துறைக்குக் காட்டிய நூற்பாவின்கண் வரும் ''மரபுடையெதிரும்'' என்பதனால் அமைத்துக் கொள்க.

    
சேறும் சேறும் என்றலின் பலபுலந்து 
    
செல்மின் என்றல் யானஞ் சுவலே 
    
செல்லா தீமெனச் செப்பிற் பல்லோர் 
    
நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே 
5
அதனாற்,செல்மின் சென்றுவினை முடிமின்சென்றாங்கு 
    
அவண்நீ டாதல் ஓம்புமின் யாமத்து 
    
இழையணி ஆகம் வடுக்கொள முயங்கி 
    
உழையீ ராகவும் பனிப்போள்; தமியே