(து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறத்தா னாதலையறிந்த தோழி அவன் இன்றி அமையாமையாலே, தாம் வருந்துவதனை அறிவுறுத்தி விரைந்து வரையுமாற்றானே தலைவியை நோக்கி நம் கொண்கன் செய்த காதல் நம்மைவிட்டு நீங்காமையாலே துறை நோக்குதற்கு வருத்தமாயிராநின்றதென வரைவுதோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.