(து - ம்.) என்பது, தலைமகன் வரைந்து கொள்ளாது களவொழுக்க மேற்கொண்டு நெடுநாள்காறும் வருதலையறிந்த தோழி, இவன் களவின் வருதலை இவள் ஆற்றாளென்பது கொண்டு ஒருநாள் அவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை நோக்கி 'நீ அவன்பால் காதல் மிக்குடையை யாதலின், என்சொல்லை ஏற்றுக்கொள்ளமாட்டாய்; ஆயினும் ஒன்று கூறுவேன் கே'ளென்று தொடங்கி அவன் சான்றோனல்லனாதலை அறிந்து கொள்ளென்று கூறி, உள்ளுறையால் அவள் செய்ய வேண்டுவதனையுஞ் சூழ்ந்து கூறிநிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
| கல்லாக் கடுவன் நடுங்கமுள் எயிற்று |
| மடமா மந்தி மாணா வன்பறழ் |
| கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும் |
| பெருங்கல் நாடனை அருளினை யாயின் |
5 | இனியென கொள்ளலை மன்னே கொன்னொன்று |