பக்கம் எண் :


406


    நலனுகர்தலால் அழகு கதிர்ப்பேறினும் அது வாட்டமுறக் கை விட்டுச் சென்றமையின் கவின் சிதையப் பெயர்ந்தனனென்றாள். இடையீட்டாலே மெய்கவின் சிதையப் போயினனாதலின் வரைவொடு வருவான் காண்; அதனைச் சென்று நோக்குதுமென அவளை ஆற்றுவித்தாளாயிற்று. வண்டிமிர்பூதத் கலிமா கடைஇ மிக்க ஆராவாரத்தோடு வருதலின், வரைவு மலிந்தமையுமாம்.

     இறைச்சி :- தாழையும் புன்னையுஞ் சேர்ந்து மணங்கமலுங் கானல் என்றது, தலைவன் வரைவொடு புகுதலாலே மணம்புரிந்துகொண்டு நீயும் அவனும் நம்முடைய சேரி விளங்க வீற்றிருப்பீரென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்வித்தல்.

     (பெரு - ரை.) வாய என்றது இலையின் விளிம்புகளை. தலைவன் ஒருதலையாக வரைவொடு வருவான் என்பது தோன்ற மணியொலிக்கும் குதிரைகளைக் கடாவி ஆரவாரத்தோடு வரும் ஆறு என்றாள். ஆறு - வகை; வழியெனினுமாம்.

(235)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகன் சிறைப்புறமாக வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வரையாமையால் ஆற்றாமை மிக்கு வருந்திய தலைவியைத் தோழி நோக்கி "நீ வலிதிற் பொறுத்திரு" வென்றாட்கு அப்பொழுது தலைமகன் ஒருபுறத்து வந்து மறைந்திருப்பதை யறிந்த தலைவி அவன் கேட்குமாற்றானே தோழியை நோக்கி "எனக்கு நோய் மிக்கது; மெய்யும் வெப்பம் உடைத்து; இனி உய்யேன்; ஒருகால் அவனது மலையிலே பட்ட காற்று என்மெய்யைத் தீண்டினால் உய்வேனாதலின், அது படும்பொருட்டு அன்னையிடஞ் சென்று 'என்னை முன்றிலிலே போகட்டாலுய்வேன்' என்று சொல்"லென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்பதனைத் 'தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்" என்னும் தந்திரவுத்தியாகக் கொண்டு அதன்கண் அமைத்துக் கொள்க.

    
நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் 
    
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே 
    
ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென 
    
முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென 
5
நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண்டு 
    
உரையினி வாழி தோழி புரையில் 
    
நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து 
    
அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென