பக்கம் எண் :


416


பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; உள்ளார் கொல் - இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ? எ - று.

     (வி - ம்.) கொடுஞ்சிறை: பறவைக்குச் சினையாகுபெயர். வேழம் - பேய்க் கரும்புமாம்.

     நிலைநில்லாப் பொருள் பிணித்தலானே நிலைபெறக் கைவந்த இன்பத்தை நீத்துச் சென்றவராதலின், அறவரல்லரெனவும், அங்ஙனம், அறவரல்லாதார்க்குச் செய்ந்நன்றி மறப்பது இயல்பாதலிற் பண்டு நாம் பாலித்த நலனுண்டு துறந்து நம் காதலர் நம்மை உள்ளாருமாயினார் போலு மெனவுங் கொண்டு கூறினாளென்பது. கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தொலைவிலுள்ள அன்புடையா ரொருவர் நினைத்துழி அன்பு செயப்பட்டார்க்குத் தும்மல் முதலியன தோன்றும் என்பது ஒரு நம்பிக்கை. இதனை,

  
"வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் 
  
 யார்உள்ளித் தும்மினீர் என்று"     (குறள் - 1317 ) 

எனவருந் திருக்குறளானும் உணர்க.

(241)
  
     திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார்கண்டு பாகற்குச் சொல்லியது.
     (து - ம்.) என்பது, வினைவயிற் சென்று மீளுந் தலைமகன் தலைமகளைக் காணும் அவாவினால் விரைவிலே தேர்செலுத்த வேண்டிப் பாகனை நோக்கிப் "பாகனே! மழைபெய்யத் தொடங்கியதுமன்; இவ்வேலை தன் குட்டியோடு களரின் கண்ணே சென்ற பிணைமானை அதன் கலைமான் தேடா நின்றது உவ்விடத்தே பாராய்; ஆதலின் நின்தேர் விரைந்து செல்வதாக"வென உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் 
    
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் 
    
பான்னெனக் கொன்றை மலர மணியெனப் 
    
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் 
5
கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து 
    
செல்க பாகநின் தேரே உவக்காண்