பக்கம் எண் :


428


மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும் பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கன் தேர் சென்றது அன்றோ - கொண்கனது தேர் முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?; எ - று.

     (வி - ம்.)ஆங்கண் - ஊர். ஊரிலுள்ள சேரியெனக் கூட்டுக. பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி. ஆங்காங்கு உவமையும் பொருளு மொத்தமையின், உள்ளுறையின்மையறிக. கைகோள் - களவு, கேட்போர் யாருமில்லையாதலில் தானே கூறியாறுதல். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இதன்கண் இரும்பு வெள்ளி பொன் என்னும் இவை முரணணியைத் தோற்றுவித்துச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க. தகைவரை ஆங்கண் என மாறினுமாம். தகைந்த எல்லையாகிய அவ்விடத்தே என்க. இஃது அவன் ஒரோவழி அலரஞ்சி வாராதொழிவானோ? என்று வருந்தியபடியாம்.

     இதன்கண் வண்டின் முரற்சியைப் புலியின் ஓசையாகக் கருதிக் குதிரைகள் விரைந்தன என்றதன்கண் மாக்களின் பழிச்சொற்குப் பயந்து நம்மை நீத்துப் போவானோ என்னும் உள்ளுறையுந் தோன்றுதலறிக.

(249)
  
நல்வெள்ளையார்
     திணை : மருதம்.

     துறை : இது, புதல்வனொடுபுக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் பெறானாய்த் தன் புதல்வனொடு சென்றால் மனைவி சினங்கொள்ளாளென்னுங் கருத்தால் அங்ஙனமே கொண்டுபுகுதலும் அதனையறிந்து தலைவி ஊடல்நீடுதலை உடன்வந்த பாணனை நெருங்கி யானும் புதல்வனுமாக அடைந்த வழியும் அவள் வெகுண்டு "நீ யாவனடா" என்றிகந்து நின்றது நகையாகின்றது ஆதலின், யாம் நகுவோம் வாராயென அவள் ஊடல் தணியும்படி கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும், தானவட் பிழைத்த பருவத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
நகுகம் வாராய் பாண பகுவாய் 
    
அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் 
    
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்