(து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் ஒருசிறைப் புறத்தானாக வந்திருப்பதையறிந்த தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்துவாள் தினையை நோக்கித் தினையே! யாம் நாடனை விரும்பியது காரணமாகவே நின்னைப் பாதுகாத்தலையும் நீ காண்பாய்; இப்பொழுது எம்மை இற்செறித்து அன்னை வெறியெடுத்ததனிமித்தம் நின்னைக் காப்பாரில்லாமையாலே, பறவைகள் நின் கதிரைக் கொண்டுபோய் விடுமாதலின் நீ இப்பொழுது விளையாமல் பிற்காலத்து விளைவாயாகவென நயந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| நெடுநீர் அருவிய கடும்பாட்டு ஆங்கண் |
| பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் |
| கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் |
| நன்மலை நாடனை நயவாய் யாமவன் |
5 | அளிபேர் அன்பின் நின்குரல் ஓப்பி |
| நின்புறங் காத்தலும் காண்போய் நீயென |
் | தளிரேர் மேனித் தொல்கவின் அழியப் |
| பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து |
| தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவருந் |
10 | தோடிடங் கோடாய் கிளர்ந்து |
| நீடினை விளைமோ வாழிய தினையே. |
(சொ - ள்.) தினையே நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் - தினையே! நெடிதாம் நீர்மையுடைய அருவியினது ஒலிமிக்க அவ்விடத்திலே; பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் கொழுமுதல் ஆய்கனி - பிணிப்புண்ட அடியையுடைய பெரிய மலையிடத்துண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை; மந்தி கவரும் நல் மலை நாடனை நயவாய் - மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனை விரும்பி; யாம் அவன் அளி பேர் அன்பின் நின்குரல் ஓப்பி நின் புறங் காத்தலும் நீ காண்போய் - யாம் அவனது கருணைமிக்க அன்பினால் நின்னுடைய கதிர்களைக் கிளிகள் கொய்யாதபடி ஓப்பி நின்னைப்