பக்கம் எண் :


438


    (வி - ம்.)கழுது - பேய். கால்கிளர்தல் : ஒருசொல். பேய் காற்றைப் போல இயங்கவென உரைப்பினுமமையும். குழுமுதல் - குமுறுதல்.

    யாமத்தெய்திற் பேயணங்கு மென்பாள் கழுதுகால் கிளர்ந்தமை கூறினாள். அவன்வரினும் கூடுதலருமை யென்னுங் கருத்தாற் காவலருமை கூறினாள். புலி குழுமுதலும் உருமுச்சிவந் தெறிதலும் குறிப்பாள், நெறியினது ஏதங்கூறினாள். அவனின்றியமையாமை கூறுவாள் நாம் தோள் நெகிழ்ந்து வருந்தினு மென்றாள். இங்ஙனங் கூறவே இவ்வெல்லாந்தீர வரைந்தெய்துமாறு பணிப்பாயாக வென்றாளாயிற்று. மெய்ப்பாடு - அச்சம். பயன் - வரைவு வேண்டல்.

    (பெரு - ரை.) இஃது, கூறியதற்குக் காரணம் வரைதல் வேட்கையன்று, தலைவியின் மேலாய பண்புடைமையே யாம் என்க. என்னை? தற்கொண்டாற் பேணுதல் குலமகளின் தலைசிறந்த பண்பாகலான் என்க. வரைதல் வேட்கையா லிங்ஙனங் கூறுதலுண்டு. அவற்றிற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. அவற்றைப் பொருளியலில் (225) காண்க. மன், தில்ல : அசைகள்.

(255)
  
    திணை : பாலை.

    துறை : இது, பொருள்வயிற் பிரிந்தானென்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதியதறிந்து வருந்துகின்ற தலைவியை 'நீ மெல்லிய அடியுடையை, காடுகள் கொடியவாதலின் நின்னுடன் செல்லுஞ் செலவு இப்பொழுது தவிர்ந்தனம், கார்காலத்து நின்னைப் பிரியவே இயலாதாகலின், அப்பொழுதுந் தவிர்ந்தன'மென அவளாற்றும் வண்ணந் தலைமகன் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும்" (தொல். அகத். 45) என்பதனான் அமைத்துக் கொள்க.

    
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப் 
    
பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை 
    
காடே, நிழல்கவின் இழந்த அழல்கவர் மரத்த 
    
புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே 
5
இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக் 
    
களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் 
    
கார்செயல் செய்த காமர் காலை 
    
மடப்பிணை தழீஇய மாஎருத்து இரலை 
    
காழ்கொள் வேலத் தாழ்சினை பயந்த 
10
கண்கவர் வரிநிழல் வதியுந் 
    
தண்படு கானமுந் தவிர்ந்தனஞ் செலவே.