(து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி தலைவியை நோக்கி 'இத்தகைய கொடிய சிறிய நெறியில் நம் தலைவர் இருளில் வருதலால், அவர் நம்பால் அருளிலராவ'ரென இரவுக்குறி விலக்கி வரைவுகடாயது
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
துறை : (2) தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, தலைவி வரைதல் வேட்கையளாய் மொழிந்தது கேட்ட தோழி தலைமகனை இகழ்ந்து கூறுதலும் அதுபொறாது தலைமகள் நொந்து 'அவர் வரைந்து கொள்ளாது இருளில் வருதலால் நம்பால் அருளிலராயினும் நாம் இறந்துபடுவது கருதி அன்பின் வருதலால், அவர் நீடுவாழ்வாராக' என இயற்படக் கூறாநிற்பதுமாம்.
(இ - ம்.) இதற்கு,
| "வரைதல் வேண்டித் தோழி செப்பிய |
| புரைதீர் கிளவி புல்லிய எதிரும்" (தொல். கள. 16) |
என்னும் விதிகொள்க.
| அருளிலர் வாழி தோழி மின்னுவசிபு |
| இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு |
| வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம் |
| நெடும்பெருங் குன்றத்துக் குறும்பல மறுகித் |
5 | தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் |
| களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் |
| வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும் |
| சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை |
| எருவை நறும்பூ நீடிய |
10 | பெருவரைச் சிறுநெறி வருத லானே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும்