பக்கம் எண் :


449


இளிவு அம்ம மன்ற அரிது-அங்ஙனம் கூறுமானால் வறுமையான் வரும் இளிவரவு அம்ம திண்ணமாக மிகக் கொடியதேயாம்; இஃதொரு வியப்பிருந்தவாறென்? எ-று.

    (வி - ம்.)கருவிளை - கருங்காக்கணம். உறை - மழைத்துளி.

    பிரிந்தவழி நடுயாமத்துத் துனிகூர்ந்து உழக்குங்கால் ஆற்றுவாரும் இலராவரே யென்பான் ஊர்துஞ்சிய யாமத்தை முதலிற் கூறினான். தோள்மீதுங் கூந்தல்மீதுங் கிடந்து முயங்குமின்பம் நினைவில்வர அதனையடுத்துப் பிற்கூறினான். முயங்காதிருந்தக்காலும் மொழி யொன்றனைக் கேட்டே இன்புற்று இருக்கலாமே அதுவுமில்லை யாவதோவென இரங்கி ஈற்றிற் கூறினான். தானே கூறியாறியது. கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத் தழுங்கல்.

    (பெரு - ரை.) இன்மையது இளிவு - இன்மையான் வரும் இளிவரவு. நாளும் இன்மையது இளிவரவினைத் தனக்கெடுத்துக் காட்டிக்காட்டி நெஞ்சுதன்னைப் பொருள்வயிற் பிரியத் தூண்டுதலானே, தன் காதலியின் அரும்பெரும் பண்புகளை நினைந்து நினைந்து இத்தகைய மாண்புடையாளையும் பிரிந்து செல்லத் தூண்டுமாயின் அவ்விளிவரவு ஆற்றுதற் கரியதொன்றே ஆதல்வேண்டும் என வியந்தபடியாம்.

(262)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைப்புறமாக வந்திருப்பதை யறிந்த தோழி தலைவியை நோக்கி அவர் நம்பால் வந்துபோகின்ற களவொழுக்கத்தால் அடைந்த அலர் முதலாயவற்றை நாணத்தினால் நாம் நேரே கூறாவிடினும் நம்முடைய கண்ணீரே அவரறியும்படி உரை செய்துவிடுகின்றனவென்று அழிந்துகூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
பிறைவனப்பு இழந்த நுதலும் யாழநின் 
    
இறைவரை நில்லா வளையும் மறையாது 
    
ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு 
    
உரையவற்கு உரையாம் ஆயினும் இரைவேட்டுக் 
5
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது 
    
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு 
    
முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்