பக்கம் எண் :


454


     கோடு முதிர்ந்தகாலத்து உதிர்தலின் அறுகோடெனப்பட்டது. முற்றிய கோடு உதிர்தலையுடைய கலையென இயைப்பினும் அமையும். பாரத்து அன்ன ஆரேற்று அன்ன மயிலன்ன காதலியாகிய இவளெனக் கூட்டி இவள் கூந்தல் நம்முடைய கையிலே சிக்குண்டதன்றோ இனி எங்குப் போகுவளென இயைப்பினுமாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய ஆக்கம்பற்றிய இளிவரல். பயன் - தலைமகன் ஆற்றல்.

     (பெரு - ரை.) மிஞிலிகாக்கும் பாரத்து அன்ன இவள்: சென்னி ஆரேற்று அன்ன இவள் கொல்லிக் கலிமயில் அன்ன இவள் எனத் தனித்தனி இயைத்துக்கொள்க. கலாவத்து ஒலிகூந்தல் என்று இயைத்துக் கொள்க. பாரம், ஆரேறு என்பன ஊர்ப்பெயர்கள்.

(265)
  
     திணை : முல்லை.

     துறை : (1) இது, தலைமகனைச் செலவுடன்பட்டது.

     (து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற் செல்லக் கருதியதறிந்த தோழி, அவன் கவலையில்லாது சென்று வினைமுடித்து வருதல் கருதி அவனை நெருங்கி ஐயனே, எம்மை இங்கு நீங்கி வினைவயினேகுவிராயின், யாம் வருந்தாது சீறூரின்கண்ணே உறைவோம்: நல்ல குடியிலே பிறந்தாரைத் தனி வைத்த காலை வருந்துதல் அவர்க்கியல்பன்றென உடன்பட்டுக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாலமைத்துக் கொள்க.

     துறை : (2) கடிநகர் வரைப்பிற் கண்டுமகிழ்ந்த தலைமகற்குத் தோழி நும்மாலே யாயிற்றென்று சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, தலைமகன் அந்தணர் சான்றோர் அருங்கல முன்னிட்டு மனையகம் புகுந்து தோழியைக் கண்டானுக்கு அவள் நீயிர் வரைவிடை வைத்துப் பிரியுங்காலை யாம் வருந்தாதிருந்ததன்றி இம் மணவினையை முயன்றேமில்லை, இது நும் முயற்சியானன்றோ நிகழ்ந்ததென மகிழ்ந்து கூறாநிற்பதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)

     (இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண் 'நாலெட்டு வகையும் தாங்கருஞ் சிறப்பிற்றோழி மேன' என்புழித் தாங்கருஞ் சிறப்பு என்ற விதப்பால் கொள்க.

    
கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த 
    
குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ 
    
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் 
    
அகலுள் ஆங்கண் சீறூ ரேமே 
5
அதுவே சாலுவ காமம் அன்றியும்  
    
எம்விட்டு அகறிர் ஆயின் கொன்னொன்று