(து - ம்.) என்பது, (வெளிப்படை) அங்ஙனஞ் சொல்லுகின்றவள் 'வெறியயர்தலாலே குன்ற நாடனை நினைக்குந்தோறும் அவன் செய்கையாலே தந்த வருத்தம் எனது நெஞ்சை நடுங்கச் செய்யா நின்றது; இஃதெப்படியாய் முடியுமோ என்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும், "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.