பக்கம் எண் :


503


போன்ற எம்முடைய இளமையும் அழகும்; இல்கடை ஒழிய - இல்லின் கண்ணே வைகிக் கெடும்படியாக; யாம் சேரும் - யாங்கள் எம் மனையகத்துச் செல்லாநிற்பேம்; முதிர்கம் - அம் மனைவயினிருந்தே முதிர்ந்து முடிவேம்; வாழி - இன்ன தீங்கினை உறுவித்த நீ நெடுங்காலம் வாழ்வாயாக! எ - று.

    (வி - ம்.) கலி - செருக்கு. மடை - மடுத்தல். சாடி தலைவிக்கும் கள் அவளது நலத்துக்கும் உவமையாகக் கொள்க; இது கிழக்கிடு பொருளாக முதலோடு முதலே வந்த பலவுவமம். வாழிய: இகழ்ச்சிக் குறிப்பு. களவுக் கியலாது என்றமையின் வரைந்தெய்துக என வரைவுகடாயதாயிற்று.

    இளநலம் நீ உண்ணாதவாறு ஒழியவென்றதனால் இனிக் களவுக்கியலாது என்று அறிவுறுத்தினாள். முதிர்கமென்றதனால் நீ வரைந்தெய்தாமையின் முதிர்ந்தொழிவோ மென்று குறிப்பித்தாள். இதனால் தமர் வேற்றுவரைவு படுத்தின் உடன்படாது இறந்தொழிவோ மென்று அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளி எனக் கண்ணழித்து அதற்கேற்பப் பொருள் கூறலுமாம். அஃது என்றது களவொழுக்கத்தை. யாயும் என்ற எச்சவும்மையான் ஊரவர் அறிந்ததல்லாமலும் என்றும் கொள்க. துறையில் வைக்கப்பட்ட கள் கலம் வந்துழி நுகரப்பட்டு எஞ்சிய பொழுதெல்லாம் வாளா வைகுதல் போன்று இவளும் இதுகாறும் நீ வந்துழி நுகரப்பட்டு எஞ்சிய பொழுதெல்லாம் வறிதே கிடப்பாள் என்பாள்; 'பெருந்துறைக் கள்ளின் சாடி அன்ன இவள் நலம்' என்றாள் என்க.

(295)
  
    திணை : பாலை.

    துறை : இது, தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலைத் தோழியாலறிந்த தலைவி அவளை நோக்கிக் 'கார்காலத்திலே நம் தலைவர் நம்மைப் பிரிந்து செல்வாராயினார்; நாம் அவரின்றி வருந்தி மனையின்க ணிருப்போ மாயினோம்; இஃதென்ன கொடுமை, இங்ஙனம் பிரிந்தால் இனி யாதாய் முடியுமோ' வென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை. . . . ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.

    
என்னா வதுகொல் தோழி மன்னர் 
    
வினைவல் யானைப் புகர்முகத்து அணிந்த 
    
பொன்செய் ஓடை புனைநலங் கடுப்பப்