பக்கம் எண் :


507


துறந்து அவன் மனைக்கண் மகிழ்ந்திருத்தல் வேண்டும் என்பது உள்ளுறையாகக் கொள்க. 'ஐயமின்றிக் கடுங்கவவினள்' என்றும் பாடம்.

(297)
  
    திணை : பாலை.

    துறை : இது, தோழியாற் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லித் தலைமகன் செலவழுங்கியது.

    (து - ம்.) என்பது, தோழி தலைவனை நெருங்கி 'நீ பொருளீட்டிவருக'வென்று தூண்டுதலானே இயைந்த தலைமகன் காதலியையடைந்து ஆங்கு வருந்திய நெஞ்சினை நெருங்கி 'நெஞ்சமே, பொருள் வருவாயினையும் இவள் தோளின் பிரிவினையும் ஒருசேர நினைதலானே, நீ ஒரு வழியினுஞ் சென்றாய் அல்லை; தோழி கூறியபடி பொருள் கொணருமாறு யாம் செல்லின் ஆண்டு இவளை எதிர்காணவுமியையுமோ? இயையுமாயின் நீ சென்று காணென அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பண்பிற் பெயர்ப்பினும்" (தொல். கள. 13) என்னும் நூற்பாவின்கண் "ஆற்றிடையுறுதலும்" என்னும் விதியை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் தோழி பொருள் வலிப்பித்து வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோன் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறியது எனக் கொள்க. இதற்கு கைகோள் - களவென்க. இனி இதனைக் கற்புக் காலத்துப் பொருள்வயிற் பிரிவோன் "வேற்று நாட் டகல்வயின் விழுமம்" (தொல். கற். 5) உற்றுக் கூறிய கூற்றெனினுமாம்.

    
வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் 
    
செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் 
    
மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட 
    
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் 
5
அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப் 
    
பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள் 
    
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம் 
    
பற்றாய் வாழிஎம் நெஞ்சே நற்றார்ப் 
    
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண் 
10
ஒருமை செப்பிய அருமை வான்முகை 
    
இரும்போது கமழுங் கூந்தல் 
    
பெருமலை தழீஇயுநோக் கியையுமோ மற்றே. 

    (சொ - ள்.) எம் நெஞ்சே - எமது நெஞ்சமே!; வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி - அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; செங்கணை தொடுத்த செயிர்நோக்கு