பக்கம் எண் :


517


    (வி - ம்.) மன்றப்பெண்ணை - ஊர்ப்பொதுப்பனை. தம் குலதெய்வத்தையும் ஊர்ப் பொதுத் தெய்வத்தையும் பனையிலேற்றுவித்து வணங்கிவருவது தொன்றுதொட்டு வரும் நெய்தல் நிலத்து வழக்கு.

    உசாவுவாருண்டாயவிடத்துச் சிறிதாற்றலாமெனினும், அதுவும் இல்லாதபடி பாக்கந் துயில்மடிந்ததேயென்று இரங்கினாள்.

    உள்ளுறை :- பரதவரிட்ட வலையைக் கிழித்துச்சென்று சுறா இயங்கும் என்றது, நாம் நமது அன்பினாலே பிணிக்கவும் தலைவன் அதனை இகந்து சென்று வைகாநின்றானென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) சேர்ப்பன் நெஞ்சத்தும் நன்னுதல் நம் வயின் வருந்தும் என்பது உண்டு கொல்? என இயைத்துக்கொள்க, 'பரியப்போகி' என்றும் பாடம்.

(303)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

    (து - ம்.) என்பது, வரைந்துகொள்ளாது பலநாளும் களவில்வந்தொழுகுந் தலைமகனை நினைந்து வருநெறியின் ஏதங்கருதி வருந்திய தலைமகள், தன்னை வருந்தாதேயென்று தோழி பலகாலுங் கூறுதலானே தாங்காது எதிர்மொழிபவள் தலைவனை முயங்கினபோது எழிலும், பிரிந்தபோது பசலையுந் தோன்றுதலால், அவன்மார்பு இன்பமும் துன்பமும் உடையதென்று கூறுவதுடன் உள்ளுறையால் அவன் விரைய மணஞ்செய்து கொள்வானாக எனவும் பரிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் 
    
சாரல் வரைய கிளையுடன் குழீஇ 
    
வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும் 
    
நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் 
5
புணரிற் புணருமார் எழிலே பிரியின் 
    
மணிமிடை பொன்னின் மாமை சாயஎன் 
    
அணிநலஞ் சிதைக்குமார் பசலை அதனால் 
    
அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் 
    
இன்பமுந் துன்பமும் உடைத்தே 
10
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. 

    (சொ - ள்.) கிளி சாரல் வரைய கிளையுடன் குழீஇ - கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து;