| ஒலியவிந்து அடங்கி யாமம் நள்ளெனக் |
| கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே |
| தொன்றுஉறை கடவுள் சேர்ந்த பராரை |
| மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் |
5 | துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் |
| துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் |
| நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது |
| உண்டுகொல் வாழி தோழி தெண்கடல் |
| வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் |
10 | கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் |
| கடுமுரண் எறிசுறா வழங்கும் |
| நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே. |