பக்கம் எண் :


515


எறுழ் வீ நரை நிறம் படுத்த தாஅந் தேரலர் கொல் - நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே; எ - று.

    (வி - ம்.) நீறு நெறியை மறைக்குங் கானமென்க. மணிநிற இணரையுடையது எறுழமலரெனவுமாம்.

    தலைவர் விரைவில் வந்து முயங்குதற்கு மில்லையேயென்பாள் சேய்நாட்டு இறந்திசினோரென்றாள். இது துன்பத்துப் புலம்பல்.

    இறைச்சி :- இரும்புதரிலுள்ள மணிநிறமலர் நரைநிறம்படுத்தவென்றது. மணிநிறமுடைய யானம் விளர்ப்புநிறம்பெற்றேனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) இதன்கண் களிறுதைத்த நீறு முதுநெறி மறைக்கும் என்றது, "எம்பெருமானுக்கு அவர் உள்ளத்தெழுந்த பொருளாசை அவர் எமக்குக் கூறிச்சென்ற உறுதிமொழியை மறைப்பதாயிற்று" என்னும் உள்ளுறையுடைத்தென்க. சேய்நாட்டு என்பது தொடங்கிக் கானம் என்னுந்துணையும் பண்டொருகால் பாலைநிலத்தின்றன்மையைத் தலைவன் கூறியதனைக்கொண்டு கூறியபடியாம்.

(302)
  
    திணை : நெய்தல்.

    துறை : (1) இது, வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன்மீதுண்டாகிய காதலானது கைகடந்து பெருக அது தாங்க இயலாத தலைவி தோழியை நெருங்கி நாம் துயரமடைதல் போல நம் கொண்கனும் துன்பமெய்தி, 'நள்ளிரவினும் நம் காதலி துயிலாளாய் வருந்துவளோ' என்று தன் நெஞ்சிலே கருதுவதுண்டாகுமோ, ஆகும் எனில் ஒன்று கூறுவாயாகவென்று அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதியாற் கொள்க.

    துறை : (2) சிறைப்புறத்தானென்பது மலிந்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைவந்து உறைவதனை அறிந்த தோழி சொல்லியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.