(து - ம்.) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலானே தலைமகள் வருந்துவளே என்று கவலைகொண்டு தோழி ஆற்றாதிருத்தலை அறிந்த தலைமகள், அவளை நெருங்கி நின்னால் எனக்குத் தீங்குவந்ததென்று அழாதேகொள்; அவனது கேண்மை நமக்குத் துன்பமுடைத்தென நீ கூறாநிற்பை; அவருடைய நட்பினியல்பை நன்றாக அறிந்துள்ளேனாதலின் யான் பொறையொடு உறைவேனென அவள் தெளியும்படி கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "உயிரினும் சிறந்தன்று நாணே . . . . .ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே" (தொல். கள. 22) என்னும் நூற்பாவின்கண் பிற என்பதனால் அமைத்துக் கொள்க.
| நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் |
| தளிர்வனப்பு இழந்தஎன் நிறனும் நோக்கி |