(து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டும் ஒரு சிறைப்புறமாக வருதலையறிந்த தோழி அவன்கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கி அவர் இன்னே வருகுவராதலின் நீ வருந்தாதேயென்று வற்புறுத்திக் கூறினாட்குத் தலைவி யான் எங்ஙனமாற்றுவேன், அவன் முயங்குமுன் இனியதாயிருந்த கடற்றுறையும் இப்பொழுது வெறுப்புடைத்தாயிற்றேயென வருந்திக் கூறா நிற்பது.
(இ - ம்.) "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல்-கள- 22) என்னும் விதிகொள்க.
| அண்ணாந் தேந்திய வனமுலை |
| மாயிரும் பரப்பகந் துணிய நோக்கிச் |
| சேயிறா வெறிந்த சிறுவெண் காக்கை |
| பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் |
| தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்குஞ் |