பக்கம் எண் :


550


பிறர் கேட்பது அரிதாகுமென்றாள். தீம்கள் பெண்ணையென்றதனால் நீ அங்குத் தங்கி விருந்துண்டு செல்லலாமென உலகியல் கூறினாளுமாம்.

     இறைச்சி:- புன்னை யுதிர்த்த தாதினை வண்டுகள் இமிர்ந்து உண்ணும் என்றதனால், தலைவியின் நலத்தை அஞ்சாதுண்டு மகிழ்ந்திருக்கலாம் என்பது மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி நேர்தல்.

     (பெரு - ரை.) நீ வாராதொழியின் அவள் இறந்துபடுவாள் என்பது தோன்ற. வரும் ஆறு ஈது என நெறிகாட்டியவள் பின்னரும் மறவாதே கொள் என்றாள். ஆயமும் யானும் நும்மை அறியாதேம் போல அவ்விடத்திலேயே இருப்பேம் என்றாள் எனினுமாம்.

(323)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகன் பாங்கற்குச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துப் பாங்கன் தலைவனை நெருங்கி நீ கூறுகின்ற மங்கை எவ்விடத்து எவ்வடிவின ளென்றானுக்கு அவள் தந்தையினது இல்வயின் இராநின்றனள்; அன்னை உணவூட்ட வந்துழி அவளை அலையப்படுத்தித் தான் ஓடியுலாவும் இளம் பருவத்தினளென இயலிடங் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

     திணை : (2) பாலை.

     துறை : இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம்.

     (து - ம்,) என்பது, கொண்டுதலைக்கழிய இடைச்சுரத்துக் கண்டோர் காலினாற் பந்து உருட்டுபவள்போல வெயிலிலே நடந்துசெல்ல மாட்டாது ஓடாநிற்கும்; இவளையீன்ற தாய் என்னென்று வருந்துங் கொலோவென்று இரங்கிக்கூறா நிற்பதுமாம். (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "பொழுது மாறும் . . . . சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டது என்ப" (தொல். அகத். 40) என்னும் விதி கொள்க.

    
அந்தோ தானே அளியள் தாயே 
    
நொந்தழி அவலமொடு என்னா குவள்கொல் 
    
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் 
    
கோடுமுற்று யானை காடுடன் நிறைதர 
5
நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் 
    
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் 
    
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி