(து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துப் பாங்கன் தலைவனை நெருங்கி நீ கூறுகின்ற மங்கை எவ்விடத்து எவ்வடிவின ளென்றானுக்கு அவள் தந்தையினது இல்வயின் இராநின்றனள்; அன்னை உணவூட்ட வந்துழி அவளை அலையப்படுத்தித் தான் ஓடியுலாவும் இளம் பருவத்தினளென இயலிடங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
திணை : (2) பாலை.
துறை : இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம்.
(து - ம்,) என்பது, கொண்டுதலைக்கழிய இடைச்சுரத்துக் கண்டோர் காலினாற் பந்து உருட்டுபவள்போல வெயிலிலே நடந்துசெல்ல மாட்டாது ஓடாநிற்கும்; இவளையீன்ற தாய் என்னென்று வருந்துங் கொலோவென்று இரங்கிக்கூறா நிற்பதுமாம்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதற்கு, "பொழுது மாறும் . . . . சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டது என்ப" (தொல். அகத். 40) என்னும் விதி கொள்க.
| அந்தோ தானே அளியள் தாயே |
| நொந்தழி அவலமொடு என்னா குவள்கொல் |
| பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் |
| கோடுமுற்று யானை காடுடன் நிறைதர |
5 | நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் |
| செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் |
| ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி |