பக்கம் எண் :


563


என்பாள், தவறுமில்லையென்றாள். நீ பிற நிலத்தினர்போன்ற கோலத்தொடு வரினும் எமர் அறிபவரல்லரென்பாள், தமர் தம் அறியாச் சேரியது என்றாள்.

     உள்ளுறை:- மகளிர் புள்ளோப்பி மாலையில் உப்புக் குவட்டின் மீது ஏறிக் கடலிலே வருகின்ற மீன் படகுகளை நோக்கி இஃது எந்தை திமில் இது நுந்தை திமிலென எண்ணுந்துறை யென்றது, யாங்கள் பகற்பொழுதில் மீனுணங்கலிற் புள்ளோப்பி இரவில் மனையகம் புகுந்திருந்து சோலையிலே நீ வந்து குறிசெய்வதனை நினைந்து இப் புள்ளோசை நீ குறிசெய்தது இவ் வோசை வேற்றுப்புள் வரவெழுந்த ஓசையென நின் வரவை எதிர்பார்த்திருப்போ மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி நேர்தல்.

     (பெரு - ரை.) ஓகை யுமணர் - மகிழ்ச்சியையுடைய உப்பு வாணிகருமாம். உழா உழவர் - பரதவர், காவற்குப்பை உப்பு ஆயமொடு உடன் ஏறி என மாறிக் கூட்டுக. பரதவர் மகளிர் என்னும் எழுவாய் வருவித்தோதுக. இது எந்தை திமில் அது நுந்தை திமில் என ஒரு சுட்டுப்பெய்து கொள்க. தமர் தமரையே அறியாச் சேரி என்பது கருத்து. மிகப்பெரிய சேரி என்றவாறு "ஒழுமையு மணர்" என்றும், தமர் தமர் அறியாச் சேரி என்றும் பாட பேற்றுமையுள. இவைகளே சிறப்புடையனவாம்.

(331)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்பத் தலைவி கூறியது.

     (து - ம்,) என்பது, களவின் வந்தொழுகுந் தலைமகனது பிரிவினால் மெலிந்த தலைமகளைத் தோழி நெருங்கி, நின்னை நாள்தோறும் தலைமகன் வந்து முயங்கி முயங்கி ஏகுங்காலையும் நீ மெலிகின்ற தென்கொலோவென்றாட்கு, இறைமகள் இயற்கைப்புணர்ச்சி வந்ததுபோன்று காதலன் கொடிய நெறியை அஞ்சானாய் நாளும் வருதலால் யான் எவ்வாறு துயரின்றி வைகுவேன் என மெலிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வன்பொறை எதிர்மறுத்ததூஉமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதுவுமது.

    
இகுளைத் தோழியிஃது என்னெனப் படுமோ 
    
குவளை குறுநர் நீர்வேட் டாங்கு 
    
நாளும் நாளுடன் கவவவுந் தோளே 
    
தொன்னிலை வழீஇயநின் தொடி யெனப் பன்மாண்