| புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி |
5 | மடநோக்கு ஆயமொடு உடனுப்பு ஏறி |
| எந்தை திமிலிது நுந்தை திமிலென |
| வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் |
| திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப |
| இனிதே தெய்யஎம் முனிவில் நல்லூர் |
10 | இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம் |
| பிறர்பிறர் அறிதல் யாவது |
| தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே. |
(சொ - ள்.) புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மட நோக்கு ஆயமொடு உடன் - மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாஅ உழவர் உவர் விளை உப்பின் - உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; ஓகை உமணர் வரு பதம் நோக்கிக் கானல் இட்ட காவல் குப்பை - செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கி்க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; உப்பு ஏறி - அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இது எந்தை திமில் (அது) நுந்தை திமில் என - இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப - வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; முனிவு இல் எம் நல்லூர் இனிது - வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இனி வரின் தவறும் இல்லை - இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; தமர்தம் அறியாச் சேரியும் உடைத்து - சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எனையதூஉம் பிறர் பிறர் அறிதல் யாவது - எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக! எ - று.
(வி - ம்.) வளைநீர் - சங்குகளையுடைய நீருமாம்.
நும்மூர் போன்றதென்பாள், எம்மூர் இனிதேயென்றாள். அன்னை முதலாயினோர் ஐயமின்றி யிருக்கின்றனராதலிற் குறிவயின் தவிராது வருதும்