(து - ம்,) என்பது, பகற்குறி இடையீடுபட்ட தலைமகன் இரவுக்குறி வந்து கூடுவது கருதினான் தோழியை வினாவ, அவள் அவனை நோக்கிச் சேர்ப்பனே! எம்மூர் இனிமையுடையதே; நீ வருதலால் யாதொரு தவறுமில்லை; தம்தம் உறவினர் ஒருவரை ஒருவர் இன்னாரின்னாரென்றறியாத சேரியையுடையதாதலின் அயலாராய் வருவாரை யறிவதெவ்வண்ணமாகுமென்று அவன் வருதற் குடன்படுவாளாய்க் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| உவர்விளை உப்பின் உழாஅ உழவர் |
| ஓகை உமணர் வருபத நோக்கிக் |
| கான லிட்ட காவற் குப்பைப் |