பக்கம் எண் :


580


என்றவாறென்க.. இச் செய்யுளின் உண்மையான பாடம் கிடைக்கவில்லை என்றே கொள்ளல் வேண்டும்.

(341)
  
    திணை : நெய்தல்.

    துறை : (1) இது, குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகனது குறைதீர்க்க உடன்பட்ட தோழி தலைவியினருகு சென்று கண்ணாலே குறிப்பித்துத் தன்வயமாக்க முயன்றும் அவள் முகங்கொடாமையாலே தன்னுள்ளே அவன் ஆற்றுவானல்லனே யென்று தான் ஆற்றாளாய் இப்பொழுது யான் குறிப்பாற் கூறினுந் தேர்வாளல்லள்; சோலையின் கண்ணே சென்றவழிப் பணிந்து மொழியின் வினவும் போலுமென்று தன்னுள்ளே கூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு, "குறைந்து அவட் படரினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    துறை : (2) தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கலளாய் ஆற்றாது தன்னுள்ளே சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, முன் கூறியபடி தோழி தலைமகளிடஞ் சென்று அவள் குறிப்பறியாளாய்த் தானே ஆற்றாது சொல்லியதுமாகும். (உரை இரண்டற்கு மொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது,
    
மாவென மதித்து மடலூர்ந்து ஆங்கு 
    
மதிலென மதித்து வெண்தேர் ஏறி 
    
என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின் 
    
சேரி சேரா வருவோர்க் கென்றும் 
5
அருளல் வேண்டும் அன்புடை யோயெனக் 
    
கண்ணினி தாகக் கோட்டியுந் தேரலள் 
    
யானே எல்வளை யாத்த கானல் 
    
வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த 
    
சென்னி சேவடி சேர்த்தின் 
10
என்னெனப் படுமோ என்றலும் உண்டே. 

    (சொ - ள்.) அன்புடையோய் என்வாய் நின்மொழிமாட்டேன் மா என மதித்து மடல் ஊர்ந்து மதில் என மதித்து வெள்தேர் ஏறி - அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி 'என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின்