பக்கம் எண் :


587


அல்கு வளி ஆட்டத்தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை - மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இன்று என்றும் நிறை உறு மதியின் இலங்கும் பொறையன் - இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் - பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; மட மா அரிவை தட மெல் தோள் நக்கனைபோல் ஆ - இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?எ - று.

     (வி - ம்.)வெப்பம் : அவாய்நிலை. அழிந்தகுடி யெனவும், இலங்கும் அரிவையெனவுங் கூட்டுக. மன் : கழிவு. நக்கனைபோல் ஆகாவெனக் கொள்க. இன்று நக்கனையென்றது, நீ புறம்போதருமுன்னே கருதியுளையேல் ஆண்டே தங்கிவிடலாமன்றோ? அங்ஙனமின்றி இன்று கருதி மகிழ்ந்ததில் யாது பயனென் றிகழ்ந்தானென்பது. மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இடைச்சுரத்தழுங்கல்.

(346)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.

     (து - ம்.)என்பது, மணஞ்செய்து கொள்ளாது நெடுங்காலம் தலைமகன் களவின்வழி வந்தொழுகுதலினாலே, அது பொறாது வருந்திய தலைமகளை நீ வருந்தாது பொறையோடிருவென்று தோழி வலியுறுத்திக் கூறலும், அது கேட்ட தலைவி என்னுடம்பின் கண்ணதாகிய நலமானது தலைவன்பாலேகி மீண்டுவந்த பரிசிலர் கூறுஞ் சிறந்த மொழிகளைக் கண்டு கேட்டு மகிழுமளவும் என்னை உயிரோடு விடுமோவென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" என்பதன்கண் "தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்" (தொல். கள. 21) என்னும் தந்திரவுத்தியினால் அமைத்துக் கொள்க.

    
முழங்குகடல் முகந்த கமஞ்சூல் மாமழை 
    
மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் 
    
ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு 
    
வான்புகு தலைய குன்றம் முற்றி