பக்கம் எண் :


59


நீட்டியாது குறித்த பருவத்து வருதலைக் கருதி அவனை எதிர்ப்பட்டு நின் பிரிவு கேட்டு நாவெழாமற் கண்ணீர்விட்டழுமிவள் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருப்பளென வருந்திக் கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய எதிரும்" (தொல்-கற்- 23) என்னும் விதி கொள்க.

    
அண்ணாந் தேந்திய வனமுலை  
    
படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை 
    
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலைப் 
    
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக் 
    
கல்லுடைப் படுவிற் கலுழி தந்து 
5
நிறைபெய லறியாக் குறைக்கூ ணல்லில் 
    
துவர்செய் யாடைச் செந்தொடை மறவர்  
    
அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை 
    
இறப்ப எண்ணுவர் அவரெனின் மறுத்தல் 
    
வல்லுவங் கொல்லோ மெல்லிய னாமென 
10
விம்முறு கிளவிய ளென்முக நோக்கி 
    
நல்லக வனமுலைக் கரைசேர்பு 
    
மல்குபுனல் பரந்த மலரேர் கண்ணே 

    (சொ - ள்.) மெல்இயல் படு சுடர் அடைந்த பரந்த மாலை - எம்பெருமானே ! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால் ! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பகுவாய் நெடுவரை முரம்புசேர் சிறுகுடி - பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து - அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லுடைப் படுவில் கலுழி தந்து - கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறை பெயல் அறியாக் குறைக்கு ஊண் அல்லில் - நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர் செய் ஆடைச் செந்தொடை மறவர் அதர்பார்த்து அல்கும் அஞ்சு வரும் நெறியிடை - துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் இறப்ப எண்ணுவர் எனின் யாம் மறுத்தல் வல்லுவம் கொல்லோ? என- அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி - வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; மலர் ஏர் கண் - அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து;